News February 28, 2025

சேலத்தில் 100 வயதை கடந்த பாட்டிக்கு சதாபிஷேக விழா

image

சேலம் குகையில் அருணாச்சல ஆசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி சரஸ்வதி. இவருக்கு 3 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி அவர்களும் பேரன், பேத்திகளுடன் சேலம் குகையில் வசித்து வருகின்றனர். ஐந்து தலைமுறையை பார்த்த மூதாட்டி சரஸ்வதிக்கு இன்றுடன் 100 வயது பூர்த்தியாகிவுள்ளது. இதனை குடும்ப உறுப்பினர்கள் விழாவாக நடத்த முடிவு செய்து, இன்று சதாபிஷேக விழாவை உற்சாகமுடன் கொண்டாடினர்.

Similar News

News September 12, 2025

2640 வெற்றியாளர்கள் ரூபாய் 42.08 லட்சம் பரிசு!

image

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி அறிக்கையில்; கடந்த மாதம் நடைபெற்ற முதல்வர் கோப்பை காண பரிசு போட்டியில் 5 பிரிவுகளில் 15 விளையாட்டுகள் நடத்தப்பட்டது. இதில் 54,157 பேர் பங்கு பெற்று தங்களது விளையாட்டு திறமையை வெளிப்படுத்தினர். இவர்களில் 4208 பேர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். அவர்களுக்கு மொத்தம் ரூபாய் 42.08 லட்சம் பரிசு வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

News September 12, 2025

சேலம்; பொது இடங்களில் பயன்படுத்தக் கூடாது!

image

சேலம் மாவட்ட காவல்துறையின் குற்ற புலனாய்வு பிரிவு காவல் துறை கைபேசி இணையதளம் பயன்படுத்தும் நபர்களுக்கு எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில் பொது இடங்களில் செல்போனில் வைஃபை பயன்படுத்தி பணம் பரிவர்த்தனை செய்யக்கூடாது. இதனால் சைபர் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. என்று எச்சரித்துள்ளனர். சைபர் குற்றங்களுக்கு 1930 அழைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

News September 12, 2025

சாலை விதிகளை கடைபிடிப்பீர். காவல் துறை எச்சரிக்கை

image

சேலம் மாநகர காவல் போக்குவரத்து பிரிவு காவல் துறையினர் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில் சாலை விதிகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை பொதுமக்கள் ஓட்ட வேண்டும், அதிவேகம் ஆபத்தாக முடியும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாதுகாப்பாக பயணம் செய்து நல்ல முறையில் வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

error: Content is protected !!