News April 3, 2025
சேலத்தில் விவசாயிகளுக்கு ரூ.1,042 கோடி பயிர்க்கடன்!

சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 1.10 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 1,042 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. ரூபாய் 1,007 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இலக்கை விட கூடுதலாக பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 14, 2025
சேலத்தில் இலவசமாக AI படிக்க வேண்டுமா?

செயற்கை நுண்ணறிவு படிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? நீங்கள் இலவசமாகவே படிக்கலாம், அதுவும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் சேலம்,கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் 12-ம் வகுப்பு,டிப்ளமோ,டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். விண்ணபிக்க <
News August 14, 2025
70% மானியம் அறிவித்தார் சேலம் கலெக்டர்!

முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் பகலில் 6 முதல் 8 மணி நேரம் வரை தடையற்ற மின்சாரத்தை பெற்று, அதன் மூலம் விவசாயிகள் கிணற்றுப் பாசனத்தை எளிதாக மேற்கொள்ள இயலும்.இத்திட்டத்தின்கீழ், சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் 70 சதவிகித மானியத்தில் நிறுவப்படும். விண்ணப்பிக்க உங்கள் அருகில் உள்ள வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
News August 14, 2025
சேலம் மாவட்ட மனநல காப்பகங்களுக்கு ஒரு மாத கெடு

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மனநல காப்பக நிறுவனங்களும் ஒரு மாதத்திற்குள் தங்கள் நிறுவனங்களைப் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வலியுறுத்தியுள்ளார். இதற்காக, https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது தலைமை அலுவலகத்திலோ கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.