News August 21, 2025
சேலத்தில் நாய்க்கடிக்கு உயிர் பலி; இதை பண்ணுங்க!

சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் ரேபிஸ் தொற்று தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தெரு நாய்கள் தொந்தரவு அல்லது நாய்க்கடி போன்ற பிரச்சனைகள் இருந்தால், பொதுமக்கள் உடனடியாக 0427-2212844 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து உதவுங்கள்.
Similar News
News February 5, 2026
அறிவித்தார் சேலம் கலெக்டர்

சேலம் கலெக்டர் பிருந்தாதேவி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில்,
சேலம் மாவட்டத்தில் பிப்.5-ல் ‘நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’ கஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, ஆத்தூர் சி.எஸ்.ஐ மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. இம்முகாம்களில் பொது மருத்துவம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களால் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
News February 5, 2026
சேலம் வனக் கோட்டத்தில் 24 அரிய வகை பறவைகள்

சேலம் வனக்கோட்டம் வாழப்பாடி, ஏற்காடு, மேட்டூர், டேனிஷ் பேட்டை, சேர்வராயன் மலை உள்ளிட்ட வனப் பகுதியில் முதன்முறையாக இரைக்கொல்லிப் பறவைகள் கணக்கெடுப்பு இரு தினங்கள் நடைபெற்றது. வனத்துறையினர், பறவை ஆர்வலர்கள் இணைந்து நடத்திய இந்த கணக்கெடுப்பில், ராஜாளி, வல்லூறு, பருந்து, ஆந்தைகள் உள்ளிட்ட 24 அரிய வகை பறவைகள் கண்டறியப்பட்டதாக மாவட்ட வன அலுவலர் ஷஷாங் ரவி காசியப் தெரிவித்துள்ளார்.
News February 5, 2026
சேலம் வனக் கோட்டத்தில் 24 அரிய வகை பறவைகள்

சேலம் வனக்கோட்டம் வாழப்பாடி, ஏற்காடு, மேட்டூர், டேனிஷ் பேட்டை, சேர்வராயன் மலை உள்ளிட்ட வனப் பகுதியில் முதன்முறையாக இரைக்கொல்லிப் பறவைகள் கணக்கெடுப்பு இரு தினங்கள் நடைபெற்றது. வனத்துறையினர், பறவை ஆர்வலர்கள் இணைந்து நடத்திய இந்த கணக்கெடுப்பில், ராஜாளி, வல்லூறு, பருந்து, ஆந்தைகள் உள்ளிட்ட 24 அரிய வகை பறவைகள் கண்டறியப்பட்டதாக மாவட்ட வன அலுவலர் ஷஷாங் ரவி காசியப் தெரிவித்துள்ளார்.


