News March 14, 2026
சேலத்தில் நவீன சாலையைத் தொடங்கி வைத்த முதல்வர்!

சேலம் மாவட்டத்தில் ரூ.985.18 கோடி மதிப்பீட்டில், 36.395 கி.மீ நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட ஓமலூர் – சங்ககிரி – திருச்செங்கோடு – பரமத்தி சாலையைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். நெடுஞ்சாலைத் துறை சார்பில் மொத்தம் 11 சாலைத் திட்டங்கள் தொடங்கப்பட்டதில், சேலத்தின் இந்த மெகா சாலைத் திட்டம் வணிக வளர்ச்சியை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News April 6, 2026
சேலம்: மகனின் கண்முன்னே தாய் துடிதுடித்து உயிரிழப்பு

சேலம் கீரைகாரனுூரைச் சேர்ந்த மகாலிங்கம், தனது தாய் சரோஜாவுடன் பைக்கில் சென்றபோது, உத்தமசோழபுரம் அருகே பின்னால் வந்த லாரி மோதியது. இதில் சரோஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மகாலிங்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 6, 2026
சேலம் மகன் கண் முன்னே தாய் உயிரிழந்த பரிதாபம்

சேலம் கீரைகாரனுூரை சேர்ந்தவர் மகாலிங்கம் (46) அவரது தாய் சரோஜாவை (60) தனது பைக்பின்னால் உட்கார வைத்துக் கொண்டு சேலம் வந்துள்ளார் உத்தமசோழபுரம் அருகே வந்த போது பின்னால் வந்த லாரி மோதியது இதனால் சரோஜா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் மகாலிங்கம் காயத்துடன் சிகிச்சை பெறுகிறார் இச்சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
News April 5, 2026
சேலம்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், சேலம் மாவட்ட மக்கள் 0427-2418735 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!


