News April 23, 2025
சேலத்தில் கொலை முயற்சி 2 பெண்கள் சிறையில்!

ஆத்தூர் அருகே குப்பைக் கொட்டும் தகராறில் லாரியை ஏற்றி கொல்ல முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் கொலை முயற்சி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்பட 4 பிரிவுகளில் பாலமுருகன், அன்பரசி,பூபதி மற்றும் உறவினர் கதிரவன் ஆகியோர் மீது ஆத்தூர் ஊரக போலீசார் வழக்கு பதிந்தனர். உள்பட அன்பரசி, செல்வி ஆகிய பெண்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 16, 2025
சேலத்தில் பிரபல நடிகரின் செயல்!

சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள அரசு பார்வையற்றோர் நடுநிலைப் பள்ளியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு திரைப்பட நடிகரும் சமூக ஆர்வலருமான திருப்பாச்சி பெஞ்சமின் உணவு வழங்கினார்.அதனைத் தொடர்ந்து அங்குள்ள மாணவ மாணவிகளிடம், மாணவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வின் போது பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.
News December 16, 2025
சேலத்தை உலுக்கிய ₹30 கோடி மோசடி!

சேலம் நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மற்றும் மகேந்திரன் ஆகியோர், பொதுமக்களிடம் மாதாந்திர சீட்டு மூலம் சுமார் ₹30 கோடி ரூபாய் திரட்டி, தற்போது பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.பாதிக்கப்பட்ட ஏராளமான பொதுமக்கள், பணத்தை மீட்டுத் தரவும், மோசடி செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கோரி இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
News December 16, 2025
மின்கம்பியாள் உதவியாளர் தேர்வு தேதி மாற்றம்!

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு டிச.13,14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அத்தேர்வானது நிர்வாக காரணங்களினால் டிச.27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் பிருந்தாதேவி அறிவிப்பு!


