News January 25, 2025
சேலத்தில் குழந்தை அடித்து கொலை; போலீசார் விசாரணை

குகைப் பகுதி சேர்ந்த பசுபதி -சண்முகப்பிரியா தம்பதியின் மூன்று வயது ஆண் குழந்தையை அவரது உறவினர் தமிழரசன் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனையடுத்து, அன்னதானப்பட்டி காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து தமிழரசனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News July 9, 2025
பொது வேலைநிறுத்தம்- ஷேர் ஆட்டோக்கள் இயங்கவில்லை

மத்திய அரசின் தொழிலாளர்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும், 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜூலை 09) தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஷேர் ஆட்டோக்கள் இயங்காததால் பேருந்து பயணிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.
News July 9, 2025
சேலம்-திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆனி பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் இன்று (ஜூலை 09) முதல் ஜூலை 11- ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலம் மத்திய பேருந்து நிலையம், ஆத்தூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பயணிகளின் எண்ணிக்கை, தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 9, 2025
உயிரிழப்பை ஏற்படுத்திய 255 ஓட்டுநர்களின் லைசென்ஸ் ரத்து!

சேலம் சரகத்தில் வாகன விபத்துக்களைக் குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், தருமபுரியில் கடந்த 6 மாதங்களில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 255 பேரின் லைசென்ஸ் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. பர்மிட், தகுதிச்சான்று இல்லாமல் வாகனங்களை இயக்கினால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.