News April 11, 2024
சேலத்தில் காவலர்கள் தபால் வாக்குப்பதிவு

2024 மக்களவைத் தேர்தலையொட்டி, சேலம் அரசு கலைக்கல்லூரி மற்றும் குகை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தபால் வாக்குப்பதிவிற்கான வாக்குச்சாவடியில் 1,875 மாநகர காவலர்களும் மற்றும் சேலம் மாவட்ட காவல்துறை மற்றும் ஆயுதப்படையை சேர்ந்த சுமார் 2,335 காவலர்கள் என மொத்தம் 4,210 பேர் இன்று வாக்களிக்கவுள்ளனர்.
Similar News
News April 16, 2025
சேலம்: இன்றைய இரவு ரோந்து போலிசார் விவரம்!

சேலம் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
News April 16, 2025
அடுத்தடுத்து 3 கோயில்களில் பூட்டை உடைத்து திருட்டு

ஓமலூர் அருகே அடுத்தடுத்து 3 திருக்கோயில்களின் பூட்டை உடைத்து சுவாமிகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கத்தாலி, தங்க ஆபரணங்கள் மற்றும் உண்டியல் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற தீவட்டிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 16, 2025
சேலம் மாவட்டத்தில் “காவல் உதவி” செயலி குறித்து காவல்துறை விழிப்புணர்வு…!

சேலம் மாவட்ட காவல்துறை, பொதுமக்கள் அவசரநிலைகளில் உடனடி பாதுகாப்பு மற்றும் உதவியை பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள “காவல் உதவி” செயலியின் பயன்பாட்டை விளக்கும் நடவடிக்கைகளை இன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. மக்கள் இந்த செயலியை தங்கள் மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இந்த செயலி வழியாக அவசர உதவிக்கு அழைக்கலாம், புகார் அளிக்கலாம், காவல் நிலைய தகவல்கள் தெரிந்துகொள்ளலாம்.