News January 16, 2025
சேலத்தில் காளை முட்டி ஒருவர் உயிரிழப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலத்தின் பல்வேறு பகுதிகளில் எருதாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஆத்தூர் அருகே உள்ள செந்தாரப்பட்டியில் நடைபெற்ற எருதாட்டம் நிகழ்சியில் காளை முட்டியதில் மணிவேல்(43) என்ற தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரம் நடத்து சென்றபோது காளை முட்டியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News September 9, 2025
சேலம் மக்களே Wi-Fi பயன்படுத்தும் போது எச்சரிக்கை!

சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்
பொது இடங்களில் உள்ள இலவச Wi-Fi பயன்படுத்தும்போது எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் பகிர வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சைபர் பாதுகாப்புக்காக அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், மோசடி புகார்களுக்கு 1930 என்ற என்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News September 9, 2025
வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!

நவராத்திரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக இயக்கப்படும் மதுரை-பெங்களூரூ கண்டோன்மென்ட்-மதுரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதாவது, தற்போது 8 பெட்டிகள் கொண்டிருந்த நிலையில் 16 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் செப்.11- ல் அமலுக்கு வரும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
News September 9, 2025
சேலத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சேலம் மாவட்டத்தில் இன்று (செப்.09) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலத்தில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.