News March 5, 2025
சேலத்தில் இளம் பெண் சடலமாக மீட்பு 3 பேர் கைது

சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதை 60 அடி பாலம் அருகே அழுகிய நிலையில் இளம்பெண் உடல் மீட்கப்பட்டது. காவல்துறையினர் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து ஏற்காடு காவல்துறையினர் அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் இரண்டு இளம் பெண்கள் ஒரு இளைஞர் என மூன்று பேரை தற்பொழுது கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 6, 2025
பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

தலைவாசல் தேவியாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மனைவி பானுமதி இவர்களது மகள் தரணி ஸ்ரீ வயது (15 ) அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று பள்ளியில் சக தோழிகள் ஐந்து பேர் கேலி கிண்டல் செய்துள்ளனர். இதனையடுத்து தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
News March 5, 2025
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.இப்பயிற்சி மாதாந்திர உதவித்தொகையாக ரூ.5,000 மற்றும் தற்செயலான செலவுகளுக்கு ஒரு முறை மட்டும் ரூ.6,000 வழங்கப்படும். எனவே, தகுதியுள்ளவர்கள் <
News March 5, 2025
சேலம் மாநகர காவல் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிரவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர் மார்ச் 5 இரவு அதிகாரிகள் விவரம்.