News September 10, 2024

சேலத்தில் இறைச்சி சாப்பிட்ட பெண் உயிரிழப்பு

image

இரும்பாலை முத்தாம்பட்டியை சேர்ந்தவர் முருகன், இவரது மனைவி லட்சுமி (45). நேற்று முன்தினம் அங்குள்ள இறைச்சி கடையில் இறைச்சி (சுவரொட்டி) வாங்கி வறுத்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவரை உறவினர்கள் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், லட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News July 8, 2025

இந்தியாவிலேயே தமிழகத்திற்கு தான் ஐ.நா விருது கிடைத்துள்ளது!

image

“இந்திய மருத்துவத்துறை வரலாற்றில் ஒரு மாநிலத்தில் ஒரு துறைக்கு ஐ.நா. விருது கிடைக்கப் பெற்றுள்ளது
தமிழகத்திற்கு தான். இந்தியா முழுவதும் விபத்தில் சிக்கும் மக்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக அடித்தளமிட்டவர் தமிழக முதலமைச்சர் தான்” என சேலத்தில் நடந்த விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு!

News July 7, 2025

சேலம் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு!

image

சேலம் மாவட்ட விவசாயிகள் விளைபொருட்களை விற்க ஒவ்வொரு வட்டாரத்திலும் பொது சேகரிப்பு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு தங்கள் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களையோ அல்லது சேலம் உத்தமசோழபுரத்தில் அமைந்துள்ள சேலம் விற்பனைக் குழு தலைமை அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம்.

News July 7, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் மாநகரில் இன்று (ஜூலை 07) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.

error: Content is protected !!