News December 28, 2025
சேலத்தில் இரவு நேர காவல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில், 27.12.2025 முதல் இரவு நேர பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவண குமார் தலைமையில், ஒவ்வொரு உட்கோட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு, ரோந்து பணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
Similar News
News December 30, 2025
ஏத்தாப்பூர் அருகே விபத்து!

செக்கடிப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன், 32.இவரது மனைவி பவித்ரா, 30. இருவரும் நேற்று டூ வீலரில் ஏத்தாப்பூர் நோக்கி சென்றனர். படையாட்சியூர் அருகே சென்றபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில், அன்பழகன் உயிரிழந்தார். பவித்ரா சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News December 30, 2025
சேலம்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)
News December 30, 2025
சேலம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

சேலம் வீரபாண்டி மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்காக தமிழக அரசின் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டு உடலை பரிசோதனை செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வலியுறுத்தியுள்ளார்


