News November 2, 2024
சேலத்தில் அடையாள அட்டை வழங்கும் முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் நமது சேலம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் எதிர்வரும் 5/11/2024 செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது. மேலும் 19/11/2024 அன்று பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் நல அலுவலர் தலைமையில் நடக்க உள்ளது.
Similar News
News July 11, 2025
பணம் இரட்டிப்பு மோசடியில் கைதான தம்பதிக்கு ஜாமீன்!

சேலம், அம்மாபேட்டையில் புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில், பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பாஸ்டர் செந்தில்குமார், அவரது மனைவி கரோலின் ஜான்சி ஆகியோருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
News July 11, 2025
சேலம்: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

➡️ சேலம் மாவட்டத்தில் நாளை 76,999 பேர் குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்.
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
➡️ தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News July 11, 2025
நாட்டுக்கோழி வளர்ப்பு: இலவச பயிற்சிக்கு அழைப்பு!

பனமரத்துப்பட்டி சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி 26 நாட்களுக்கு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பயிற்சியில் கோழி வளர்ப்பு, தீவனம் தயாரிப்பு, நோய் தடுப்பு முறைகள் குறித்து கற்றுக்கொடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 994178451 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.