News November 8, 2025
சேலத்திற்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை

தமிழகம் வழியாக புதிதாக ஒரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, எர்ணாகுளம் – பெங்களூரு இடையிலான ரயில் நாளைய தினம் தொடங்கி வைக்கப்படவுள்ளது. ரயிலின் நேர அட்டவணையை, காலை 5.10 மணிக்கு கே.எஸ்.ஆர்.பெங்களூரு ரயில் நிலையத்தில் புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 5.23 மணிக்கு சேலம், 9 மணிக்கு திருச்சூர், பிற்பகல் 1.50 மணிக்கு எர்ணாகுளம் வந்தடையும்
Similar News
News November 7, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.07) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News November 7, 2025
JUST IN:சேலத்தில் டெண்டர் கோரியது தமிழக அரசு!

சேலத்தில் நவீன வசதிகள் கொண்ட நூலகம் அமைக்கப்படும் என கடந்தாண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இந்தநிலையில் ரூ. 73 கோடி மதிப்பீட்டில் பாரதிதாசன் பெயரில் சேலத்தில் நூலகம் அமைப்பதற்கான டெண்டரை (Tender) தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. டெண்டர் நடைமுறைகள் முடிந்த பிறகு, விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கி, இந்த நூலகங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
News November 7, 2025
சேலத்தில் கொடூர கொலை!அண்ணன் வெறிச்செயல்

சேலம் பொன்னம்மாப்பேட்டையை சேர்ந்த சந்தோஷ் (45) அவரது தம்பி தியாகராஜன் (37) இருவரும் மதுவுக்கு அடிமையான நிலையில் அடிக்கடி தகராரில் ஈடுபட்டு வந்த்தாக கூறப்படுகிறது.இந்தநிலையில் இன்று மது போதை தலைக்கு ஏறிய நிலையில் அண்ணன் சந்தோஷ் தம்பி தியாகராஜனை கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு போன் வாயிலாக அவரது உறவினர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீஸ் விசாரணை!


