News October 29, 2025
‘சேமிப்பு கணக்கை தொடங்குங்கள்’ – கிருஷ்ணகிரி ஆட்சியர்!

கிருஷ்ணகிரி: ஆண்டுதோறும் அக்டோபர் 30ம் தேதி உலக சிக்கன நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அருகிலுள்ள அஞ்சல் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் சேமிப்பு கணக்கை தொடங்குமாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், வருவாயை உயர்த்தியும், செலவுகளை குறைத்தும் வாழ வேண்டும் என்னும் திருவள்ளுவரின் கூற்றை மேற்கோள்காட்டி உலக சிக்கன நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
Similar News
News October 29, 2025
கிருஷ்ணகிரி: ரூ.20,000 மானியத்தில் இ-ஸ்கூட்டர் வேண்டுமா?

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News October 29, 2025
கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவிப்பு!

கிருஷ்ணகிரி தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் நவம்பர் 2025 முதல் நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகள் 18-வயதிற்குட்பட்டோர் அரசு தலைமை மருத்துவமனை அறை எண்-7, மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் மையதிலும், 18-வயதிற்க்கு மேற்பட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையிலும் நடைபெறும். என மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் கூறியுள்ளார்.
News October 29, 2025
கிருஷ்ணகிரி: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in , என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


