News April 11, 2025
செல்போன் பேசியதை கண்டித்ததால் சிறுமி தற்கொலை

திருப்பூர் கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மெய்ரவன். இவரது மகள் அனுசயா 9ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இவர் அடிக்கடி போனில் நீண்ட நேரம் பேசி வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்ததால் மனம் உடைந்த அனுசயா, இன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 18, 2025
திருமண தடை நீக்கும் அற்புத கோயில்

திருப்பூர் மாவட்டம் நகரின் மையத்தில் பிரசித்தி பெற்ற கொங்கணகிரி முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக கந்தப் பெருமான் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும்,செவ்வாய் தோஷம் நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 18, 2025
திருப்பூர் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

▶️திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் 0421-2250192.▶️திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் 0421-2200553.▶️அவிநாசி வட்டாட்சியர் 04296-273237.▶️பல்லடம் வட்டாட்சியர் 04255-253113.▶️காங்கேயம் வட்டாட்சியர் 04257-230689.▶️உடுமலை வட்டாட்சியர் 04252-223857.▶️மடத்துக்குளம் வட்டாட்சியர் 04252-252588.▶️ஊத்துக்குளி வட்டாட்சியர் 04294-260360.▶️தாராபுரம் வட்டாட்சியர் 04258-220399. இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.
News April 18, 2025
திருப்பூர்: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. RAIL MADDED என்ற அப்ளிகேஷனை இந்த லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்து பயணிகள் பயன்பெறலாம். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த செயலி செயல்படுகிறது. புகார்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்கும் *SHARE *