News April 25, 2025
செல்போன் பேசினால் லைசென்ஸ் காலி!

கடந்த மூன்று மாதத்தில் சேலம், தருமபுரியில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 233 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகன விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 146 ஓட்டுநர்களின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தயவுசெய்து வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவதைத் தவிருங்கள் பாதுகாப்பாக இருங்கள்.
Similar News
News April 25, 2025
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆஜர்

பல்கலைக்கழக விதிமுறைகளை மீறி தனியார் அமைப்பு தொடங்கி அதன் மூலமாக முறைகேடு நடந்ததாக பதிவுச் செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் இன்று (ஏப்.25) சூரமங்கலம் காவல் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
News April 25, 2025
மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சித்திரை அமாவாசையை முன்னிட்டு, சேலம், தருமபுரி, மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு வரும் ஏப்.27- ஆம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் அறிவித்துள்ளது. அதேபோல், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறைக்கும், சித்தர்கோயிலுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
News April 25, 2025
கடும் வெயில் எதிரொலி- சேலத்தில் பீர் விற்பனை அதிகரிப்பு!

சேலம் மாவட்டத்தில் 200 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 3 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை நடக்கின்றது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பீர் வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. வழக்கமான விற்பனையில் இருந்து 60% பீர் வகைகள் விற்பனை கூடியுள்ளதாக டாஸ்மாக் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.