News December 21, 2024

செல்போன் டவரில் ஏறி பெண் போராட்டம்

image

காரியாபட்டி தாலுகா மீனாட்சிபுரம் கிராமத்தில் இன்று சோலார் நிறுவனத்தினர் நெடுஞ்சாலை துறைக்கு பாத்தியப்பட்ட இடத்தில் மின் கம்பம் அமைத்து மின் இணைப்பு தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பஞ்சவர்ணம் என்ற பெண் செல்போன் டவரில் ஏறி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் காவல் துறையினர் அப்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Similar News

News March 10, 2026

விருதுநகர்: கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது – MP

image

தமிழ்நாட்டில் விருதுநகர், மதுரை மாவட்டங்களில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் மக்களிடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மக்கள் முன்பே பார்த்த ஒரு நிலை. இந்த நிலை குறித்து மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். மக்களை மீண்டும் ஒரு தேவையற்ற நெருக்கடிக்குள் தள்ளக் கூடாது என விருதுநகர் MP மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

News March 10, 2026

விருதுநகர்: ரூ.15 லட்சம் வரை காப்பீடு பெறலாம்

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News March 10, 2026

சிவகாசி: பள்ளி அருகே பட்டாசு கடைகள் – அதிர்ச்சி

image

சிவகாசி அருகே மாரனேரியில் தனியார் பள்ளி அருகே சுமார் 200 மீட்டர் தூரத்தில் 10-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கு அருகே பட்டாசு கடைகளுக்கு விதியை மீறி உரிமம் வழங்கப்பட்டதா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதுடன் வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!