News October 24, 2024
செல்போனில் முன் பதிவு செய்து கைதிகளை சந்திக்கலாம்

கோவை மத்திய சிறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய சிறையில் கைதிகளை சந்திக்க கடந்த சில மாதங்களுக்கு முன் விண்ணப்ப மனு கொடுத்து சந்திக்க வேண்டியிருந்தது. இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு செல்போனில் முன் பதிவு செய்து கைதிகளை உறவினர்கள் சந்திக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. இதில், செல்போனில் டோக்கன் பெற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நேரம் ஒதுக்கி சந்திக்கலாம் என்றனர்.
Similar News
News April 29, 2025
கோவை: பள்ளத்தில் கவிழ்ந்த கார்

கோவை சூலூரை சேர்ந்த ஸ்ரீநிவேதா, தனது தாயார் வாணியுடன் காரில் செஞ்சேரி மலை முருகன் கோயிலுக்கு சென்றிருக்கிறார். பார்க்கிங்கில் காரை நிறுத்த முயன்ற போது, பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால், 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக ஏர்பேக் ஓபன் ஆனதால், இருவரும் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 29, 2025
கோவை: முக்கிய காவல் நிலைய தொடர்பு எண்கள்!

▶️ காந்திபுரம் – 9498101143. ▶️ ஆர்.எஸ்.புரம் – 0422-2475777. ▶️ மதுக்கரை – 9498101184. ▶️ பேரூர் – 0422-2607924. ▶️ தொண்டாமுத்தூர் – 0422-2617258. ▶️ பெ.நா.பாளையம் – 9498101189. ▶️ மேட்டுப்பாளையம் – 9498101186. ▶️ அன்னூர் – 9498101173. ▶️ கருமத்தம்பட்டி – 9498101178. ▶️ சூலூர் – 7845175782. ▶️ பொள்ளாச்சி டவுன் – 04259-224433. ▶️ ஆனைமலை – 04253-282230. ▶️ வால்பாறை – 9487374392. இதை SHARE பண்ணுங்க.
News April 29, 2025
ரயில்வேயில் உடனடி வேலை வாய்ப்பு

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.