News March 19, 2024

செய்யூர் பகுதிகளில் விவசாயிகள் மகிழ்ச்சி

image

செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தர்ப்பூசணி பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது இந்த தர்ப்பூசணி அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் தர்ப்பூசணி கொள்முதல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக டன் ஒன்று ரூ.12,000 விற்ற தர்ப்பூசணி தற்போது ரூ.15,000 முதல் 17,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Similar News

News September 25, 2025

செங்கல்பட்டு: நாளை மறுநாள்! மிஸ் பண்ணிடாதீங்க

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் 27-ம் தேதி பையனூரில் உள்ளவிநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் – ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில், 8th, டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு 044-27426020 9486870577 / 9384499848 என்ற எண்களை அழைக்கலாம். (ஷேர் பண்ணுங்க)

News September 25, 2025

தாம்பரம் மாநகராட்சி கடும் எச்சரிக்கை

image

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், ஸ்பூன், ஃபோர்க், தட்டு, கேரிபேக் உள்ளிட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. எனவே வணிக நிறுவனங்கள் விதிகளை மீறி இவற்றை விற்பனை செய்வது அல்லது பயன்படுத்தினால் ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.

News September 25, 2025

செங்கல்பட்டில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தபடுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கபடுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

error: Content is protected !!