News March 19, 2024

செய்யாறு அருகே விவசாயி உயிரிழப்பு

image

செய்யாறு அருகே பழஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பார்த்தசாரதி.
இவர் சில ஆண்டுகளாக உடல் நலம் குன்றி மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
பல இடங்களில் மருத்துவ சிகிச்சை பெற்று உடல் குணமாகாததால் நேற்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அனக்காவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 5, 2025

தி.மலை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக நேற்று (நவ.04) இரவு முதல் இன்று (நவ.5) காலை வரை ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News November 4, 2025

தி,மலை: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

திருவண்ணாமலை மக்களே.., அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. SHARE பண்ணுங்க

News November 4, 2025

தி.மலை: ரூ.71,900 சம்பளத்துடன் அரசு வேலை!

image

தமிழத்தில் காலியாக உள்ள 1,429 HEALTH INSPECTOR பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, MPHW/ சுகாதார ஆய்வாளர் ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 18-60 வயதிற்குள் இருக்க வேண்டும். இதற்கு ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்களுக்கு கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.

error: Content is protected !!