News August 4, 2024

செயற்கைகால்கள் பெற்ற மாற்றுதிறனாளிகள்

image

கோவையில், செயற்கைகால்கள் மற்றும் கைகளை இலவசமாக பொருத்தும் முகாம் நடைபெற்றது. ராஜஸ்தானில் உள்ள நாராயண் சேவா சன்ஸ்தான் எனும் அமைப்பு சார்பில் கடந்த ஏப்ரலில் நடந்த முகாமில் மாற்றுதிறனாளிகளுக்கு அளவீடுகள் எடுக்கப்பட்டன. தற்போது மருத்துகுழுக்களின் உதவியுடன் கோவை, ஈரோடு, சேலம், மதுரை என பல்வேறு பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மாற்றுதிறனாளிகளுக்கு செயற்கை கால்களை வெற்றிகரமாக பொருத்தினர்.

Similar News

News February 6, 2026

சேலத்தில் லட்ச கணக்கில் பண மோசடி! ALERT

image

சேலம் ஆத்தூர் அருகே பகுதிநேர வேலை வாய்ப்பு என்ற மின்னஞ்சல் லிங்க்கை நம்பி, தனியார் பள்ளி ஆசிரியர் செல்வம் தவணை முறையில் ₹6.46 லட்சத்தை இழந்துள்ளார். மீண்டும் பணம் கேட்கப்பட்டபோது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஹேமாவதி தலைமையிலான போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 6, 2026

வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் ஆட்சியர்

image

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் விருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் சமூகம் ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் தர்ப்பூசணி ரசாயனம் கொண்டு பழுக்க வைத்ததாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது பொதுமக்கள் அதை நம்ப வேண்டாம் அரசு விஞ்ஞானிகளும் உணவு பாதுகாப்பு அலுவலர்களும் இதுகுறித்து கள ஆய்வு மேற்கொண்டு தெளிவு படுத்தி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

News February 6, 2026

அறிவித்தார் சேலம் கலெக்டர்!

image

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகின்ற 7ம் தேதி அம்மாபேட்டை பாவடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஓமலூர் அரசு வெள்ளாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், மல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ஏத்தாப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்வும். இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்

error: Content is protected !!