News March 24, 2025
சென்னை TIDEL Parkல் வேலை- ரூ.1,87,000 வரை சம்பளம்

சென்னை டைடல் பார்க் நிறுவனத்தில் மேற்பார்வை பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.59,300 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு BE (EEE), ஏதேனும் ஒரு டிகிரி உடன் CA முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <
Similar News
News March 26, 2025
நோய் விலகி நலம் தரும் திருநீா்மலை ரங்கநாதர்

தென் சென்னைப் பகுதியில் உள்ள குரோம்பேட்டையில் இருந்து 5 கி.மீ தூரத்தில் பிரசித்தி பெற்ற திருநீா்மலை ரங்கநாதர் சுவாமி கோவில் உள்ளது. இத்தலத்தில் உள்ள குளத்தில் நீராடி வழிபட்டால் நோய் விலகி நலம் உண்டாகும். மேலும், குழந்தை இல்லாதவர்கள் மரத்தில் தொட்டில் கட்டியும், திருமண தடை நீங்க கிரிபிரதட்சணம் செய்தும் வழிபட்டால் உடனே வேண்டியது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.
News March 26, 2025
சென்னையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை மற்றும் ஸ்டெர்லிங் சாலையில் பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. இதனால் மார்ச்.29 அன்று காலை 10 மணி முதல் மார்ச்.30 அன்று காலை 10 மணி வரை குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News March 26, 2025
சென்ட்ரல் ஆவடி நள்ளிரவு மின்சார ரயில் ரத்து

பராமரிப்பு பணியின் காரணமாக சென்னை சென்ட்ரல் ஆவடி இடையே நள்ளிரவு இயங்கும் புறநகர் மின்சார ரயில் மார்ச் 26,27,28 தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளது. ஆவடி ரயில் பணிமனையில் மார்ச் 26,27,28 தேதிகளில் நள்ளிரவு 12:30 மணி முதல் 3:30 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் அந்நாளில் சென்ட்ரலில் இருந்து 12:15க்கு ஆவடி செல்லும் புறநகர் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.