News September 1, 2025
சென்னை: B.Sc, B.CA, M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர் <
Similar News
News September 4, 2025
தூய்மை பணியாளரை பாராட்டிய துணை முதல்வர்

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர் கிளாரா திருவான்மியூரில் பணியின் போது, கீழே கிடந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலியை கண்டெடுத்திருக்கிறார்.உடனே அதனை காவல் நிலையத்தில் ஒப்படைத்து, உரியவரிடம் சேர்க்கச் சொன்னார். அவரின் நேர்மையை அறிந்த முதல்வர் வாழ்த்து தெரிவித்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கிளாரா குடும்பத்தை நேரில் வரவழைத்து பாராட்டி, நிதியுதவி அளித்தார்.
News September 4, 2025
சென்னைக்கு மழை வாய்ப்பு

தமிழ்நாட்டில் வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், சென்னையில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் வரும் 10ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. வரும் 8ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது
News September 4, 2025
சென்னையில் சிங்கப்பூர் திறன் மேம்பாட்டு மையம்

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் உடனான சந்திப்புக்கு, பிறகு பிரதமர் மோடி பேசுகையில், சென்னையில் திறன் மேம்பாட்டுக்கான தேசிய சிறப்பு மையத்தை அமைப்பதில் சிங்கப்பூர் ஒத்துழைப்பு அளிக்கும். விண்வெளி அறிவியல் துறை ஒத்துழைப்பில் சிங்கப்பூர் ஒரு புதிய அத்தியாயத்தை சேர்க்கிறது. தற்போதைய பொருளாதார சூழலில் இந்தியா-சிங்கப்பூர் உறவு மிகவும் முக்கியமானது என்றார்.