News October 12, 2025

சென்னை: 3வயது சிறுவனை கடித்த தெரு நாய்

image

சென்னை, நெற்குன்றத்தில் 3வயது ஆண் குழந்தையை தெரு நாய் ஒன்று நேற்று கடித்துள்ளது. உடனடியாக குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையின் பிறப்புறுப்பை நாய் கடித்துள்ளதால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். “தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சிறுவனின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News October 12, 2025

சென்னையில் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

சென்னை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <>லிங்கில்<<>> மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News October 12, 2025

சென்னை: இன்றே கடைசி நாள்!

image

சென்னை மக்களே, கனரா வங்கியில் காலியாக உள்ள 3,500 Apprentices Training பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 394 பணியிடங்கள் உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. அடிப்படை சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 12-10-2025 ஆகும். SHARE பண்ணுங்க மக்களே. ஒருவருக்காவது உதவும்!

News October 12, 2025

சென்னை: ஏரியில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

image

சென்னை செங்குன்றம் அப்துல் மரைக்காயர் தெருவை சேர்ந்தவர் முகமது யாசின். மாநகர போக்குவரத்து கழக ஊழியர். நேற்று காலை, நண்பருடன் புழல் ஏரியில் நீச்சல் கற்றுக் கொண்டிருந்தார். அப்போது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, முகமது யாசின் நீரில் மூழ்கி பலியானார். தகவல் அறிந்த செங்குன்றம் தீயணைப்பு துறையினர், ஏரிக்கு சென்று சடலத்தை மீட்டனர். செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!