News January 14, 2026
சென்னை: விரக்தியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

சென்னை, கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்தவர் ரத்தினகுமார். இவரது மகள் பிரியங்கா (16). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் +1 படித்து வந்தார். இந்நிலையில், அரையாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால், பெற்றோர் பிரியங்காவை கண்டித்தனர். இதில் விரக்தியடைந்த பிரியங்கா, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 22, 2026
சென்னையில் வாலிபர் தீயிட்டு தற்கொலை!

சென்னை மாதவரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில், இன்று காலை புகை மூட்டமாக காணப்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். விசாரணையில், அந்த அறைக்குள் இருந்த அடையாளம் தெரியாத வாலிபர், தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துள்ளது தெரியவந்தது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த நிலையில், அவருடைய விவரம் குறித்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
News January 22, 2026
தனிச் சின்னத்தில் போட்டி – ஜி.கே.வாசன்

சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், பாஜக தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், 20ம் தேதி சென்னைக்கு வருகை தந்தார். அவரை, ‘NDA’ கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து வருகின்றனர். அதன்படி, நுங்கம்பாக்கத்தில் தங்கியிருக்கும் பியூஷ் கோயலை, தமாக தலைவர் ஜி.கே.வாசன் இன்று சந்தித்தார். பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வரும் தேர்தலில் தமாக தனிச் சின்னத்தில் போட்டியிடும்” என்றார்.
News January 22, 2026
சென்னை: உங்களிடம் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். சென்னை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (044-22311049) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க


