News November 26, 2025
சென்னை வந்தடைந்த KAS & ஆதரவாளர்கள்

இன்று MLA பதவி ராஜினாமா, நாளை தவெகவில் இணைப்பு என்ற தகவலுக்கு மத்தியில், செங்கோட்டையன் சென்னை வந்துள்ளார். ஏர்போர்ட்டில் தவெகவில் இணைவது பற்றி கேட்டபோதும், அவர் மறுப்பு தெரிவிக்காமல் சென்றார். மேலும் , அவரது ஆதரவாளர்களில் பலரும் சென்னை விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவருக்கும் ரூம் புக் செய்துள்ளதாகவும், இதனால் நாளைய அரசியல் களம் பரபரப்புக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Similar News
News November 26, 2025
நான் பிரதமராக உயர இதுவே காரணம்: மோடி நெகிழ்ச்சி

அரசியலமைப்பு தினத்தையொட்டி PM மோடி மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தன்னை போன்ற எளிய குடும்பத்தை சேர்ந்தவர் PM ஆனது அரசியலமைப்பு சட்டத்தால்தான் என்ற அவர், அரசமைப்புதான் கனவு காணும் சக்தியையும், அதை நோக்கி உழைக்கும் வலிமையும் அளிக்கிறது என கூறியுள்ளார். மேலும், வலுவான ஜனநாயகத்தின் அடித்தளமாக இருக்கும் அரசியலமைப்பில் உள்ளவற்றை எப்போதும் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News November 26, 2025
BREAKING: பாதி வழியிலேயே திரும்பினார் செங்கோட்டையன்

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திலிருந்து காலை 8:30 மணிக்கு செங்கோட்டையன் புறப்பட்டார். இதைப்பார்த்த செய்தியாளர்கள், கேமராவுடன் அவரின் காரை பின்தொடர்ந்து சென்றனர். இதையறிந்த உடனே பாதி வழியிலேயே 8:45 மணிக்கு மீண்டும் வீட்டுக்கு காரை திருப்பினார். MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இன்றே விஜய்யை அவர் சந்திப்பார் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 26, 2025
புதுச்சேரியிலும் கால் பதிக்கும் விஜய்.. டிச.5-ல் ரோடு ஷோ

புதுச்சேரியில் விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்றாலும், புஸ்ஸி ஆனந்தின் சொந்த ஊரும் இதுதான். இதனால், தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரி அரசியலிலும் விஜய் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், டிச.5-ம் தேதி காலாப்பட்டு முதல் கன்னிக்கோவில் வரை (தமிழ்நாடு எல்லை ஆரம்பத்தில் இருந்து புதுச்சேரி எல்லை முடிவு வரை) ரோடு ஷோ நடத்த விஜய் அனுமதி கேட்டுள்ளார்.


