News January 20, 2026

சென்னை வந்தடைந்தார் விஜய்!

image

2-வது முறையாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி சென்ற தவெக தலைவர் விஜய் நள்ளிரவு சென்னை திரும்பினார். கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக சிபிஐ அனுப்பிய சம்மனுக்கு நேரில் ஆஜராகி, அவர்களது கேள்விகளுக்கான விளக்கங்களை அளித்தார். விசாரணை முடிவடைந்ததை அடுத்து, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்னை வந்தடைந்தார். அவருடன் தவெக நிர்வாகிகளான நிர்மல் குமார் உள்ளிட்டோரும் வந்தனர்.

Similar News

News February 6, 2026

தேமுதிக கூட்டணி முடிவை தாமதிக்க இதுதான் காரணமா?

image

கூட்டணி நிலைப்பாட்டில் காங்கிரஸின் இரட்டை மனநிலையே தேமுதிக கூட்டணி முடிவை அறிவிக்காததற்கு காரணம் என புதிய தகவல் கசிந்துள்ளது. திமுக கூட்டணியில் இருக்கிறோம் என காங்கிரஸ் நிர்வாகிகள் கூறி வந்தாலும், தவெகவுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இதனால், காங்., TVK பக்கம் சென்றால், தேமுதிகவும் அங்கு செல்ல விரும்புவதாக கூறப்படுகிறது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

News February 6, 2026

பாஸ்வேர்டுகளை AutoFill செய்கிறீர்களா?

image

உங்கள் போனில் பேஸ்புக், எக்ஸ் போன்றவற்றில் உள்நுழையும்போது பாஸ்வோர்டை AutoFill செய்பவரா? நீங்கள் பெரிய ஆபத்தில் இருக்கிறீர்கள். IIIT ஹைதராபாத்தின் ஆராய்ச்சியில், இப்படி AutoFill செய்வது செக்யூரிட்டி வேலையை குறைக்கிறதாம். இதனால், உங்களின் போன் சைபர் கிரிமினல்கள் ஈசியாக ஹேக் செய்யப்பட்டு விடும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. எனவே, இனி உங்களின் அனைத்து பாஸ்வோர்டுகளையும் டைப் செய்யுங்கள். SHARE IT.

News February 6, 2026

விஜய்யால் விரக்தியில் தவெகவினர்?

image

கட்சியில் எந்த பணியும் முழுமையாக நடக்கவில்லை என தவெகவினர் குமுறுவதாக கூறப்படுகிறது. அனைத்து மண்டலங்களிலும் பூத் கமிட்டி மாநாடு நடக்கும் என கூறியதோடு சரி, அதை நடத்தவில்லை, மக்களிடம் வாங்கப்பட்ட மனுக்கள் கிடப்பில் உள்ளன, திங்கள்தோறும் நிர்வாகிகளை தலைவர் சந்திப்பார் என கூறப்பட்டது ஆனால் சந்திக்கவில்லை, சுற்றுப்பயணமும் சரிவர நடக்கவில்லை என நிர்வாகிகள் சிலர் விரக்தியில் உள்ளதாக பேசப்படுகிறது.

error: Content is protected !!