News October 3, 2025
சென்னை: வங்கி வேலை… ரூ.1 லட்சம் வரை சம்பளம்

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.64,820 முதல் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தேர்வு மையம் ஆகும். விண்ணப்பிக்க இங்கு <
Similar News
News October 3, 2025
சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலைய மேலாளர் அலுவலகத்திற்கு இ-மெயில் ஒன்று வந்தது. அதில் சென்னை விமான நிலையத்தில் உள்ள குப்பைத் தொட்டிகளில், வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. சிறிது நேரத்தில், வெடித்து சிதறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். பின், அது புரளி என தெரியவந்தது.
News October 3, 2025
சென்னை: ரூ.20,000 மானியத்தில் இ-ஸ்கூட்டர் வேண்டுமா?

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். 5)விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)
News October 3, 2025
BREAKING: சென்னையில் பெண்ணை கடித்து குதறிய நாய்

சென்னை, அபிராமபுரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை குமார் என்பவரின் வளர்ப்பு நாய் கடித்தது. நாய் கடித்ததில் வீட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளி உஷா(45) என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் தொடர்ந்து நாய்கடி சம்பவம் அதிகரித்து வருவதால், அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.