News December 8, 2025

சென்னை: ரயிலில் முக்கிய பொருளை மிஸ் பண்ணிடீங்களா?

image

ரயிலில் பயணம் செய்யும் போது உங்கள் போன் அல்லது முக்கிய பொருட்கள் தொலைத்து விட்டீர்களா? கவலை வேண்டாம் இந்திய ரயில்வே 24×7 செயல்படும் ரயில் மடாட் (Rail Madad) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள் Rail Madad <>மொபைல் செயலியில்<<>> PNR-யை உள்ளிட்டு, காணாமல் போன பொருட்களின் விவரங்களை பதிவு செய்யலாம். ஆப் பயன்படுத்த விரும்பாத பயணிகள் railmadad.indianrailways.gov.in இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். SHARE

Similar News

News April 7, 2026

JUST IN: பெரம்பூரில் ஜோசப் விஜய் பெயரில் 5 பேர் போட்டி

image

சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் சி.ஜோசப் விஜய் என்ற பெயரில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், ஜி.விஜய், கே.விஜய், எஸ்.ஜோசப், எம்.ஜோசப் என வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுவும் ஏற்கப்பட்டுள்ளது. எனவே ஜோசப் விஜய் என்ற பெயரில் 4 பேர் போட்டியிடுகின்றனர். தவெக தலைவரோடு சேர்த்து 5 பேர் ஜோசப் விஜய் பெயரில் களம் காண்கின்றனர்.

News April 7, 2026

ஜாஃபர் சாதிக் வீட்டில் 2வது நாளாக சோதனை

image

பட்டினப்பாக்கத்தில் உள்ள முன்னாள் திமுக நிர்வாகி ஜாஃபர் சாதிக் வீட்டில்
வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று அவரது சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக அவரது வீட்டில் சோதனை நீடிக்கிறது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 7, 2026

BREAKING: ஆதவ் அர்ஜுனா வேட்புமனு நிறுத்தி வைப்பு!

image

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனாவின் வேட்பு மனுவை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ELECTION OBSERVER வரும்வரை இவரின் வேட்பு மனுவை நிறுத்தி வைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் கூறியுள்ளார். அதேபோல் திமுக சார்பில் எழும்பூரில் போட்டியிடும் தமிழன் பிரசன்னாவின் மனுவை ஏற்பதிலும் குழப்பம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!