News February 24, 2026
சென்னை: ரயிலில் செல்வோர் கவனத்திற்கு!

எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக திருத்தப்பட்ட அட்டவணை நாளை முதல் அமலுக்கு வருகிறது. AC மின்சார ரயில் சேவை ஞாயிறு இயக்கப்படாது எனவும், கும்மிடிப்பூண்டி – தாம்பரம் மின்சார ரயில் சேவை செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகள் ரயில்கள் எழும்பூர் நோக்கிச் செல்லும்போது பல்லாவரம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு நிலையங்களில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 24, 2026
சென்னை: மாணவருக்கு வெட்டு.. 3 சிறுவர்கள் கைது

சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் பரஞ்ஜோதி (17), பள்ளி மாணவர். இவருக்கு அதேப்பகுதியை சேர்ந்த 15 மற்றும் 17வயது மாணவர்கள் இருவர் உட்பட மூன்று பேருக்கு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் செல்போனை பார்த்தப்படி நின்ற பரஞ்ஜோதியிடம் தகராறில் ஈடுபட்ட மூன்று பேரும், கத்தியால் அவரை வெட்டி செல்போனை பறித்து சென்றனர். புகாரின் பேரில் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
News February 24, 2026
சென்னை: மின்சார ரயில் பயணிகளுக்கு மேலும் அதிர்ச்சி!

சென்னை எழும்பூரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று முதல் பல மின்சார ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் மேலும் 49 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 40 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் மொத்தம் 89 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் கடும் சிரமமடைந்து வருகின்றனர். ஷேர் பண்ணுங்க
News February 24, 2026
சென்னையில் கொடூர தாய் கைது!

சாலிகிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது தாய்க்கும் தட்சிணாமூர்த்தி என்பவரும் திருமணம் மீறிய உறவு இருந்துவந்துள்ளது. இந்த நிலையில், தாய் தனது சொந்த மகளுக்கே தூக்கமாத்திரை கொடுத்து, தட்சிணாமூர்த்தியை பாலியல் அத்துமீறலில் ஈடுபட அனுமதித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் உறவினர் உதவியுடன் வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அவரது தாயை போலீசார் கைது செய்தனர்.


