News May 27, 2024
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு விருது

தமிழ்நாடு இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு நடத்திய மூன்றாவது மனிதவள மேலாண்மை உச்சி மாநாடு 2024-இல், பொது மற்றும் பெரிய நிறுவனங்கள் பிரிவின் கீழ் சிறந்த மனிதவள நடைமுறைகளுக்கான வெற்றியாளராக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு ஸ்கோர் 2024 விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை இன்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக மனித வள தலைமை பொது ராஜரத்தினம் பெற்று கொண்டார்.
Similar News
News August 10, 2025
சென்னையில் அதிகரித்து வரும் குடிநீர் பிரச்சனை

சென்னை தி.நகர் பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் தற்போது வரை நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி உள்ள மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறுகின்றனர்.
News August 10, 2025
சென்னை: இரவு நேர ரோந்து போலீசார் பணி விவரம்

சென்னையில் இன்று (ஆக.9) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
News August 9, 2025
சென்னையை அலறவிட்ட கொலை.. திடுக் திருப்பம்

சூளைமேட்டைச் சேர்ந்தர் முகில். இவர் நேற்று குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரது அண்ணன் ராஜபிரபா, முகில் கழுத்தை அறுத்து கொலை செய்தார். ஆனால், முகிலை கொன்றது தாய் பிரமிளா என சரணடைந்த நிலையில், ராஜபிரபா அளித்த வாக்குமூலத்தில் தனக்கு அடுத்த மாதம் திருமணம் இருப்பதால் தாய் பழி ஏற்றியதாக கூறினார். பின் ராஜ பிரபாவை கைது செய்தனர்.