News January 13, 2026
சென்னை: முற்றிலும் இலவசம்… செம வாய்ப்பு

தமிழக அரசு சார்பில் ஏழை, விதவை, கணவன்&சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுகிறது. இதன்படி, தையல் எந்திரம் & துணை சாதனங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இதற்கு அருகில் உள்ள பொதுசேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு மாவட்ட சமூகநல அலுவலரை (044-25264568) தொடர்பு கொள்ளுங்கள்.*செம திட்டம். நண்பர்களுக்கு பகிரவும்*
Similar News
News January 25, 2026
சென்னை: திருடிய வண்டியிலேயே தொழில் செய்த நபர்!

சென்னை ஓட்டேரி மங்களபுரம் பகுதியில் மகேஸ்வரன் ஆட்டோவை திருடிய பிரேம்குமாரை (45) போலீசார் கைது செய்தனர். தி.நகர் பகுதியில் வாகன சோதனையின்போது பிடிபட்ட அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஒரு வாரமாக திருட்டு ஆட்டோவில் சவாரி ஓட்டி, அதில் கிடைத்த வருமானத்தில் மது குடித்துவிட்டு ஆட்டோவிலேயே தூங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரேம்குமாரை கைது செய்த சிறையில் அடைத்தனர்.
News January 25, 2026
சென்னை: வீட்டில் பாலியல் தொழில்!

சென்னை வளசரவாக்கத்தில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அந்த பகுதியில் சோதனை செய்த போது, வீடு ஒன்றில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. அங்கு சென்று பாலியல் தொழில் நடத்திய காயத்ரி (31) என்பவரை கைது செய்த போலீசார், 4 பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 25, 2026
சென்னை: விமானத்தில் நடுவானில் உயிரிழப்பு

பிஜியில் வசிக்கும் இந்தியரான சதாசிவன், தனது மனைவி நளினி ரஞ்சனி தேவியை சிகிச்சைக்காக சென்னை அழைத்து வர முடிவு செய்தார். இதற்காக இருவரும் அங்கிருந்து, மலேசியா வந்து, மலேசியன் ஏர்லைன் மூலம் சென்னை வந்தனர். அப்போதுநளினி ரஞ்சினிக்கு நடுவானில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை சென்னை விமான நிலைய போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விசாரிக்கின்றனர்.


