News August 17, 2024
சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சென்னை மாநகராட்சியின் 1913 என்ற புகார் தெரிவிக்கும் சேவையில், புகார்களுக்கு மாநகராட்சியால் தீர்வு காணப்பட்டதை புகார்தாரரிடம் உறுதி செய்த பிறகே அந்த புகாரை முடிக்க வேண்டும் என்று அம்மையத்தின் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார். புகாருக்கு தீர்வு காணாமல் முடித்து வைத்தால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News August 21, 2025
சென்னையில் சுய தொழில் துவங்க ஆசையா? SUPER CHANCE!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் செப்.1ம் தேதி முதல் 3ம் தேதி வரை காலை 10மணி முதல் மாலை 5மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற<
News August 21, 2025
ரகுமான் கானின் நூல்கள் வெளியீடு

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கில் முன்னாள் அமைச்சர் அ.ரகுமான்கான் எழுதிய 5 நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நியாயங்களின் பயணம், மௌனமாய் உறங்கும் பனித்துளிகள், உலகமறியா தாஜ்மஹால்கள், பூ பூக்கும் இலையுதிர் காலம், வானம் பார்க்காத நட்சத்திரங்கள் ஆகிய நூல்களை முதல்வர் வெளியிட்டார். இந்நிகழ்வின் போது கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
News August 21, 2025
சென்னை: Whats’App இருக்கா? சூப்பர் தகவல்

சென்னை மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)