News January 28, 2025
சென்னை மாநகராட்சி அவுட்சோர்சிங் ஏற்பாடு 2/3

காலை உணவு திட்டத்திற்கான உணவை சமைத்து கொடுக்கும் பணிகளை அவுட்சோர்சிங் செய்ய மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. வடசென்னையில் 9,956, மத்திய சென்னையில் 13,052, தென் சென்னையில் 9,583 மாணவர்கள் பயன்பெறுவர். தூய்மை, மிகவும் பாதுகாப்பான முறையில் உணவை கொண்டு செல்லுதல், போதிய அளவில் உணவு, சரியான நேரத்தில் விநியோகம், தரமான உணவு போன்றவற்றை உறுதி செய்யப்பட உள்ளது. இதற்காக ரூ.14 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
Similar News
News August 24, 2025
சென்னை கலெக்டர் அறிவிப்பு

பெற்றோர் இருவரையும் இழந்த மற்றும் ஒரு பெற்றோரால் கைவிடப்பட்ட 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் ‘அன்பு கரங்கள்’ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
News August 24, 2025
சென்னை மாநகராட்சியின் அதிரடி திட்டம்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 75 இடங்களில் சுற்றுச்சூழல் கண்காணிப்பு கருவிகளை பொருத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ‘IoT-based environmental sensors’ என்ற கருவி மூலம், வெப்பம், ஈரப்பதம், மாசு அளவு உள்ளிட்டவற்றை கணக்கிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். இது நடைமுறைக்கு வந்தால் இந்தியாவிலேயே இத்தகைய கருவிகள் பொருத்தும் முதல் நகரமாக சென்னை மாறும் என கூறப்படுகிறது.
News August 24, 2025
சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 23) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.