News November 6, 2025
சென்னை: மர்மமான முறையில் இறந்த தொழிலாளி!

மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பீஜூல் (31) கோல்டன் ஜார்ஜ் நகரில் கட்டடப்பணி செய்து வந்தார். உடல்நலக்குறைவால் அவர் பணிக்கு செல்லாமல் தன் அறையில் இருந்தார். இரவு சக பணியாளர்கள் திரும்பி வந்த போது, பீஜூலை கழுத்தில் கயிறுடன் தரையில் கிடப்பதை கண்டனர். மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்தார். போலீசார், இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 6, 2025
சென்னை: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

சென்னை மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!
News November 6, 2025
சென்னை: புலனாய்வுத் துறை வேலை, ரூ.1,42,000 சம்பளம்!

மத்திய புலனாய்வுத் துறையில் Grade-2 அதிகரிக்கான 258 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.16-க்குள் இந்த <
News November 6, 2025
சென்னை: பைக் ரேஸ்-பேன்சி கடை ஓனர் பரிதாப பலி!

சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் மேம்பாலத்தில் நேற்று இரவு சோயல் மற்றும் சுகைல் ஆகியோர் இருச்சக்கர வாகனத்தில் பைக்ரேஸில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, எதிர்திசையில் குமரன் என்பவர் தனது பேன்சி கடையை மூடி விட்டு டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அவர் மீது மோதியதில், சுகைல் & குமரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சோயல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலிசார் விசாரிக்கின்றனர்.


