News April 18, 2024
சென்னை: மருதாணி வைத்திருந்தால் ஓட்டு போடலாமா?

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை(ஏப்.19) நடைபெற உள்ளது. இந்நிலையில் கையில் மருதாணி, மெஹந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதி மறுப்பு என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இது குறித்து நேற்று(ஏப்.17) விளக்கமளித்த சென்னை தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன், “இது அடிப்படை ஆதாரமற்ற வதந்தி; வாக்குச்சாவடியில் பெயர் இருந்தால் யார் வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்” என தெளிவுபடுத்தினார்.
Similar News
News December 14, 2025
சென்னை: புகைப்படம் எடுத்து பெண்ணுக்கு தொந்தரவு!

சென்னை பூக்கடை பகுதியில் வசிக்கும் 37 வயது பெண், இவரது வீட்டிற்கு அருகில் கடலை வியாபாரம் செய்து வந்த வீரபாரதியிடம் பழகி வந்துள்ளார். இந்நிலையில், அந்த பெண் வீரபாரதியிடம் பேச மறுக்க, கடந்த 2 நாட்களாக அவரை புகைப்படம் எடுத்து, வீரபாரதி தொந்தரவு செய்துள்ளார். கடந்த 12ஆம் தேதி பெண்ணின் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட, பெண் அளித்த புகாரின் பேரில் கொத்தவால்சாவடி போலீசார் நேற்று வீரபாரதியை கைது செய்தனர்.
News December 14, 2025
சென்னை: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.
News December 14, 2025
சென்னையில் குடுகுடுப்பைக்காரர் போல் வந்து திருட்டு

சென்னை கொட்டிவாக்கத்தில் குடுகுடுப்பைக்காரர் போல வேடமணிந்து வந்து, வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் செய்வினை இருப்பதாக கூறி திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவன், குழந்தைகள் இறந்துவிடுவார்கள் என்றும், பூஜை செய்வதாக கூறியும் பெண்ணின் 5 சவரன் நகை, ரூ.10,000 திருடியுள்ளார். சிசிடிவி காட்சிகளை வைத்து போலி குடுகுடுப்பைக்காரர் பாலமுரளி என்பவர் கைது செய்யப்பட்டார்.


