News August 10, 2024
சென்னை போக்குவரத்து போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு வாசிகள், தங்கள் வீடுகளின் முன் அனுமதியின்றி “நோ பார்க்கிங்” போர்டுகளை வைத்துள்ளதாக, நந்தகுமார் என்பவர் வழக்கு தொடுத்தார். இதுபோன்ற போர்டுகள் வைக்க எந்த அனுமதியும் வழங்கவில்லை எனவும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள இந்த போர்டுகளை அகற்றுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போக்குவரத்து காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News September 19, 2025
ALERT: சென்னையில் இன்று மழை வெளுக்கும்

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 21ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. எனவே வெளியே செல்வோர் முன்னெச்சரிக்கையா இருங்க.
News September 19, 2025
சென்னை மக்களே குடிநீர் வரவில்லையா?

சென்னை மக்களே உங்கள் தெருக்களில் குடிநீர் வரவில்லை அல்லது கழிவுநீர் தேங்கி உள்ளதா? இனி கவலை வேண்டாம். குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றம் சிக்கல்கள் மற்றும் குறைபாடுகளை பகிர 044-4567 4567 என்ற தொலைபேசி எண்ணை chennai metro water அறிமுகம் செய்துள்ளது. இதில் உங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அல்லது toll-free 1916 எண் மூலம் உடனே தொடர்பு கொள்ளலாம். *இந்த பயனுள்ள தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க*
News September 19, 2025
சென்னையில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

சென்னையில் ரேபிஸ் தடுப்பூசி திட்டத்தின் கீழ், இதுவரை 50,823 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது தெருநாய்கள், வளர்ப்பு நாய்கள் என அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ரேபிஸ் தடுப்பூசி குறித்து சென்னையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.