News January 9, 2026
சென்னை: போகி பண்டிகை மாநகராட்சி அறிவுறுத்தல்!

சென்னையில் போகி பண்டிகையன்று காற்று மாசு ஏற்படுவதைத் தவிர்க்க, பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. வரும் ஜனவரி 14-ம் தேதி 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்று தரம் கண்காணிக்கப்படும் என்றும், விழிப்புணர்வு வீடியோக்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 13, 2026
கோயம்பேட்டில் பேருந்தை கொளுத்திய ஆசாமி!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்றிரவு பிளாட்பாரத்தில் நின்ற பேருந்தில் தீ வைத்தவரை போலீசார் தேடி வருகின்றனர். உடனடியாக தீ அணைக்கப்பட்ட நிலையில், அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஒருவர் பேப்பரில் தீ பற்ற வைத்து பேருந்துக்குள் வீசியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
News February 13, 2026
குடிநீர் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு!

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில், பொதுமக்களின் குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான குறைகளைக் களைவதற்காக “குறை தீர்க்கும் கூட்டம்” நாளை பிப். 14, (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டம் சென்னையின் 15 பகுதி அலுவலகங்களிலும் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 13, 2026
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (பிப்.12) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


