News December 14, 2025
சென்னை: புகைப்படம் எடுத்து பெண்ணுக்கு தொந்தரவு!

சென்னை பூக்கடை பகுதியில் வசிக்கும் 37 வயது பெண், இவரது வீட்டிற்கு அருகில் கடலை வியாபாரம் செய்து வந்த வீரபாரதியிடம் பழகி வந்துள்ளார். இந்நிலையில், அந்த பெண் வீரபாரதியிடம் பேச மறுக்க, கடந்த 2 நாட்களாக அவரை புகைப்படம் எடுத்து, வீரபாரதி தொந்தரவு செய்துள்ளார். கடந்த 12ஆம் தேதி பெண்ணின் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட, பெண் அளித்த புகாரின் பேரில் கொத்தவால்சாவடி போலீசார் நேற்று வீரபாரதியை கைது செய்தனர்.
Similar News
News March 1, 2026
சென்னை: குடிநீர் புகார்களுக்கு இனி ஈஸி தீர்வு!

சென்னையில் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் தொடர்பான புகார்களைப் பதிவு செய்ய “சென்னை குடிநீர்” மொபைல் செயலியை பயன்படுத்துமாறு சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்தச் செயலி மூலம் புகார்களை அளித்தால், மிக விரைவாகத் தீர்வு காண முடியும் என தெரிவித்துள்ளது. இந்தச் செயலியில் புகார்களைப் புகைப்படத்துடன் பதிவேற்றும் வசதி உள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News March 1, 2026
சென்னை மக்களுக்கான அவசர உதவி எண்கள்!

▶காவல் கட்டுப்பாட்டு அறை – 100, ▶தீ தடுப்பு, பாதுகாப்பு – 101, ▶இலவச தாய், சேய் ஊர்தி – 102, ▶போக்குவரத்து காவலர் – 103, ▶விபத்து உதவி எண் – 108, ▶பேரிடர் கால உதவி – 1077, ▶குழந்தைகள் பாதுகாப்பு – 1098, ▶பெண்கள் பாதுகாப்பு – 181, ▶கார்ப்பரேஷன் புகார்கள் – 1913, ▶ரயில்வே முன்பதிவு விசாரணை – 132, ▶கண் வங்கி – 1919, ▶எரிவாயு – 1716, ▶BSNL – 199. ஷேர் பண்ணுங்க
News March 1, 2026
சென்னை: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

சென்னை மக்களே, கேஸ் புக்கிங்கில் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் e-KYC & OTP கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. e-KYC இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது. பாரத் கேஸ் : https://www.ebharatgas.com, இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in, ஹெச்.பி: https://myhpgas.in கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. ஷேர் பண்ணுங்க


