News April 24, 2024

சென்னை: பழக்கடைகளில் அதிரடி சோதனை

image

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள பழக்கடைகளில் இன்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மாம்பழ சீசன் தொடங்கிவிட்டதால், மாம்பழம் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ரசாயன கற்கள் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டதா என அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை கைப்பற்றி அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு அஅபராதம் விதித்தனர்.

Similar News

News August 21, 2025

சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

image

சென்னை மாநகராட்சி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையான நாய்களை வீட்டில் வளர்க்ககூடாது. நோய் தடுப்பூசி செலுத்திய நாய்களை மட்டுமே வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும். கழுத்துப்பட்டை, முகமூடி அணியாமல் நாய்களை வெளியே கொண்டு வரக்கூடாது என தெரிவித்துள்ளது. தெருநாய் குறித்த புகார்களை https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம்.

News August 21, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று எங்கெல்லாம் நடைபெறும்?

image

சென்னை மாநகராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று (ஆகஸ்ட் 21) 9 வார்டுகளில் நடைபெறவுள்ளது. திருவொற்றியூர் (வார்டு-10, பூந்தோட்டம்), தண்டையார்பேட்டை (வார்டு-48, மின்ட்), இராயபுரம் (வார்டு-58, சிடன்ஹாம்ஸ் சாலை), அம்பத்தூர் (வார்டு-80, சூரப்பேட்டை), தேனாம்பேட்டை (வார்டு-117, மெலனி சாலை), கோடம்பாக்கம் (வார்டு-141, சி.ஐ.டி. நகர்) ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க!

News August 20, 2025

சென்னையில் நாளை கரண்ட் கட்!

image

சென்னையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆகஸ்ட் 21) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கரணை மீனாட்சி நகர், பெரும்பாக்கம் கைலாஷ் நகர், ஆண்டனி நகர், புளியந்தோப்பு பவுடர் மில்ஸ் ரோடு, வீராசெட்டி தெரு, திருவான்மியூர் சாஸ்திரி நகர், அடையாறு இந்திரா நகர் 1 முதல் 3வது பிரதான சாலை, கஸ்தூரிபாய் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்படும். ஷேர்!

error: Content is protected !!