News March 27, 2024

சென்னை: நேற்று மட்டும் ரூ.1.42 கோடி பறிமுதல்

image

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் கடுமையாக அமல்படுத்தி வருகிறது. அதன்படி சென்னை சென்ட்ரல், ராயபுரம், ஆழ்வார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று(மார்ச் 26) மட்டும், ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.1.42 கோடியை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Similar News

News February 15, 2026

சென்னை: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

News February 15, 2026

புழல் சிறையில் பரபரப்பு!

image

சென்னை: வியாசர்பாட், கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்(29). இவர், கஞ்சா கடத்தல் வழக்கில் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல், வியாசர்பாடியைச் சேர்ந்த மற்றொரு அஜித்(26) என்பவர், வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர்களை நேற்று(பிப்.14) வேறு அறைக்கு மாற்ற சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த போது தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

News February 15, 2026

சென்னையில் பெண் அதிரடி கைது!

image

பெரம்பூரைச் சேர்ந்தவர் சுகுமாறன். இவர், இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி, சாவியை வீட்டின் மறைவான இடத்தில் வைத்து விட்டு வெளியே சென்றார். இதை நோட்டமிட்ட மர்மப் பெண் ஒருவர், வீட்டில் இருந்த பணம், வெள்ளிப் பொருட்களை எடுத்துச் சென்றார். விசாரணையில், அவர் ராணிப்பேட்டையைச் சேர்ந்த இந்துமதி(35) என்பதும் ஏற்கனவே பல திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் எனத் தெரிய வந்ததும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!