News January 15, 2026
சென்னை: நாளை இதற்குத் தடை!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, நாளை (ஜன.16) சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பூர், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை & கள்ளிக்குப்பம் இறைச்சிக் கூடங்கள் மூடப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசின் இந்த உத்தரவிற்கு இறைச்சிக் கடை வியாபாரிகளும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
Similar News
News February 10, 2026
மார்ச் முதல் UTS செயலி நிறுத்தம் ‘ரயில் ஒன்’ செயலி அறிமுகம்

சென்னை தெற்கு ரயில்வேயில் ‘யூடிஎஸ் ‘ செயலி மார்ச் முதல் நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாக ‘ரயில் ஒன்’ செயலி பயன்பாட்டிற்கு வருகிறது. முதல்கட்டமாக டிக்கெட் முன்பதிவு, புதுப்பித்தல் மற்றும் புதிய பயனர் பதிவு நிறுத்தப்படும். தொடர்ந்து பிளாட்பார்ம் டிக்கெட், ஆர்-வாலட் டாப்-அப் வசதிகளும் முடக்கப்படும். பயனர்களின் ஆர்-வாலட் இருப்பு பாதுகாப்பாக இருக்கும். அதனை ‘ரயில் ஒன்’ செயலியில் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
News February 10, 2026
சென்னை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 10, 2026
சென்னை: முகவரி சொன்ன பெண்ணுக்கு கொடூரம்

நொளம்பூர் மற்றும் முகப்பேர் சாலை யில் நடந்து சென்ற பெண்களிடம், முகவரி கேட்பது போல நெருங்கிய நபர் ஒருவர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் திருமங்கலம் மகளிர் போலீசார், சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். இதில், நொளம்பூரைச் சேர்ந்த பயாஸ் அகமது (45) என்பது தெரிந்தது. போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.


