News October 9, 2025
சென்னை: நாட்டை உலுக்கிய வழக்கில் கைது!

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ரங்கநாதன் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ சன் பார்மா என்கின்ற மருத்துவ நிறுவனம் நடத்தி வருகிறார். சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்து 20 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் இன்று (அக். 9) இன்று கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மத்திய பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
Similar News
News October 9, 2025
சென்னை: விஜய் வீட்டிற்கு மிரட்டல் விடுத்தவர் கைது

சென்னை நீலாங்கரை இல்லத்தில் தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தவ்பீக் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலிசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் விஜய் இல்லத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வந்தனர். பின் அவை புரளி என தெரியவந்தது.
News October 9, 2025
சென்னை மக்களே ஆதாரில் இனி இது கட்டாயம்!

சென்னை மக்களே, அக்.1 முதல் மத்திய அரசு 5 – 17 வயது உள்ள குழந்தைகளுக்கு கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) ஆதாரில் கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் எதும் இல்லை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். வரும் காலங்களில் ஆதார்தான் அனைத்திற்கும் தேவையாக இருக்கும். எனவே, உடனடியாக ஆதார் மையங்களுக்கு சென்று இலவசமா UPDATE பண்ணுங்க. இந்த தகவலை பெற்றோர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 9, 2025
சென்னை: NLCல் 1000+ காலி இடங்கள்; கைநிறைய சம்பளம்

நெய்வேலி நிலக்கரி நிலையத்தில் அப்ரெண்ட்ஸ் பணிக்கு 1,101 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, பார்மசி, வணிகம், CS, நர்சிங் பட்டப் படிப்புகள் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். உதவித்தொகையாக ரூ.12,524 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <