News June 20, 2024

சென்னை – நாகர்கோவில் பயண நேரம் அறிவிப்பு

image

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் வரை மொத்தம் 742 கிலோ மீட்டர் தொலைவை 8 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றடையும். தற்போது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் 11 மணி நேரம் 35 நிமிடங்களும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் 11 மணி நேரம் 50 நிமிடங்களும் பயணம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 8, 2025

குமரியில் 39 பேருக்கு போக்சோ தண்டனை

image

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆர். ஸ்டாலின் பதவி ஏற்றத்திலிருந்த குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார். இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 39 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

News November 7, 2025

குமரி மாவட்டத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் சாதனை

image

குமரி மாவட்டத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் திலீபன் என்பவர் சென்னையில் நடைபெறும் 23 வது ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். இதன் மூலம் 2026 ஆம் ஆண்டு தென் கொரியா நாட்டில் நடைபெறும் உலக மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். மாவட்ட எஸ். பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News November 7, 2025

களியக்காவிளையில் வாக்காளர் தீவிர திருத்த பணி

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, விளவங்கோடு சட்டமன்ற வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தூர் ராஜன் அவர்கள் இன்று 7-ம் தேதி விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களியாக்கவிளை பகுதியில் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை வாக்காளர்களுக்கு வழங்குவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

error: Content is protected !!