News November 18, 2025
சென்னை: தங்கையை வெட்டிய அண்ணனால் பரபரப்பு !

அயனாவரத்தை சேர்ந்தவர் ஹேமாவதி(40). இவரது அண்ணன் அமுதவணன், இருவரும் குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். பூர்வீக வீடு என்பதால் இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று தங்கையிடம் அமுதவணன் பிரச்னை செய்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த அமுதவணன், வீட்டில் இருந்த கத்தியால், ஹேமாவதியை வெட்டினார். புகாரின் பேரில் போலீசார் அமுதவணனை கைது செய்தனர்.
Similar News
News November 18, 2025
75 ஆண்டுகளுக்கு பின்.. சென்னையில் கம்பேக்!

சென்னையில் கைவிடப்பட்ட டிராம் சேவை மீண்டும் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதற்கட்ட தகவல்களின்படி, தி. நகர், நுங்கம்பாக்கம், நந்தனம், மற்றும் கலங்கரை விளக்கம் வரையிலான 15.4 கிலோமீட்டர் தூரத்திற்கு நவீன டிராம் பாதை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. 2 டிராம் பணிமனைகள் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆய்வு முடிந்த பிறகு அவற்றின் சரியான இடங்கள் உறுதி செய்யப்படும்.
News November 18, 2025
75 ஆண்டுகளுக்கு பின்.. சென்னையில் கம்பேக்!

சென்னையில் கைவிடப்பட்ட டிராம் சேவை மீண்டும் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதற்கட்ட தகவல்களின்படி, தி. நகர், நுங்கம்பாக்கம், நந்தனம், மற்றும் கலங்கரை விளக்கம் வரையிலான 15.4 கிலோமீட்டர் தூரத்திற்கு நவீன டிராம் பாதை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. 2 டிராம் பணிமனைகள் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆய்வு முடிந்த பிறகு அவற்றின் சரியான இடங்கள் உறுதி செய்யப்படும்.
News November 18, 2025
ஊழியர்கள் வேலை நிறுத்தம்; அரசு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளில்(SIR) அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பணிச்சுமை அதிகரித்துள்ளதால், இன்று (நவ.18) SIR பணிகளில் ஈடுபடாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ ஜியோ, வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில், SIR பணிகளை புறக்கணித்து விடுமுறை எடுத்தால், ஊதியம் கிடையாது என தலைமை செயலர் முருகானந்தம் எச்சரித்துள்ளார்.


