News May 2, 2024

சென்னை டூ திருவண்ணாமலைக்கு இன்று ரயில் சேவை

image

சென்னை- திருவண்ணாமலை இடையே ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்ட மெமு ரயில் சேவை இன்று(2.5.24) மாலை 6 மணிக்கு தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில், தி.மலைக்கு ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு 12 மணிக்கு வந்தடையும், பின் தி.மலையில் இருந்து மறுநாள் 3ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு காலை 9.50 மணிக்கு வந்தடையும்.

Similar News

News August 24, 2025

வேப்பேரியில் காதலன் கண்முன்னே காதலி தற்கொலை

image

வேப்பேரியைச் சேர்ந்த தர்ஷன் மற்றும் ஹர்ஷிதா ஆகியோருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், ஹர்ஷிதாவின் குணநலனில் சந்தேகம் இருப்பதாகக் கூறி தர்ஷன் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார். இதில் மனமுடைந்த ஹர்ஷிதா, தர்ஷனின் வீட்டிற்கு வந்து பேசி கொண்டிருந்தபோது, திடீரென 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தர்ஷனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 24, 2025

சென்னை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள். (<<17503531>>தொடர்ச்சி<<>>)

News August 24, 2025

சென்னை: தீர்வு இல்லையா? CM Cell-ல் புகாரளியுங்கள்

image

சென்னை மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். இங்கே<> க்ளிக் <<>>செய்து உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். இது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால் உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். (SHARE செய்யுங்கள்)

error: Content is protected !!