News February 8, 2026

சென்னை: ஜூஸில் கிடந்த பூரான்!

image

காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (27). இவர் ராமாபுரத்தில் உள்ள டீக்கடையில் தர்பூசணி ஜூஸ் ஆர்டர் செய்து குதித்துள்ளார். அந்த ஜூஸில், உயிருடன் பூரான் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்காரர் உரிய பதில் அளிக்காததால், அவர் அளித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News February 9, 2026

சென்னையில் EB பில் எகுறுதா..?

image

சென்னை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <>கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 9, 2026

சென்னை: ஊஞ்சல் புடவை இறுகி துடிதுடித்து பலி

image

சோழவரம் அடுத்த ஆத்தூரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் மோனிஷ் (12). நேற்று மாலை விளையாடி கொண்டிருந்த போது சகோதரியுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது ஊஞ்சல் புடவையை கழுத்தில் சுற்றிக்கொண்டு தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக புடவை கழுத்தில் சுற்றி இறுக்கியுள்ளது. இதில் மோனிஷ் பரிதாபமாக இழந்தார். இதுகுறித்து சோழவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 9, 2026

சென்னையில் பயங்கரம்.. வெட்டி சாய்த்த கும்பல்!

image

கொளத்தூரை சேர்ந்தவர் ஜான்பாஷா(39). மெக்கானிக்கான இவர் ராஜி(40) என்பவரது கடையில் வேலை பார்த்து வந்தார். ராஜியின் மகளை கொளத்தூர் பாலாஜி நகரை சேர்ந்த விக்னேஷ்(24) என்பவர் இன்ஸ்டாவில் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை ராஜி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ்யின் கும்பல் அரிவாளுடன் வந்து ராஜியை வெட்ட முயன்றார். குறுக்கே வந்த ஜான்பாஷாவுக்கு கை, தலையில் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது.

error: Content is protected !!