News July 8, 2025

சென்னை சைபர் குற்றப்பிரிவு ரூ.2.96 கோடி மீட்பு

image

சென்னை சைபர் குற்றப்பிரிவு ஜூன் 2025-ல், 146 புகார்களில் ரூ.2.96 கோடி பணத்தை மீட்டு சாதனை புரிந்துள்ளது. இதில் மத்திய மண்டலம் மட்டும் ரூ.2.30 கோடியை மீட்டுள்ளது. வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு மண்டலங்களிலும் கணிசமான மீட்பு நடந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு இதுவரை மொத்தம் ரூ.15.30 கோடி மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Similar News

News July 8, 2025

திருநங்கையர், திருநம்பியருக்கு வேலைவாய்ப்பு முகாம்

image

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 11ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேலைவாய்ப்பற்ற திருநங்கை மற்றும் திருநம்பியருக்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முகாமில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை. இது வேலை தேடும் திருநங்கையர், திருநம்பியருக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும்.

News July 7, 2025

வீட்டுமனை விளம்பரத்திற்கு கட்டுப்பாடுகள்

image

வீட்டுமனை மற்றும் கட்டட விற்பனை செய்யும் நிறுவனங்கள், அதன் அமைவிடத்தை சரியாக குறிப்பிடாமல், அருகிலுள்ள பகுதிகளிலிருந்து இவ்வளவு நேரத்தில் செல்லலாம் என விளம்பரப்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு கட்டட மனை ஒழுங்குமுறை குழுமம் எச்சரித்துள்ளது. அதேபோல, 100க்கும் மேற்பட்ட வசதிகள் என்றோ, நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்றோ கவர்ச்சி வாசகங்களுடன் விளம்பரம் செய்யவும் தடை விதித்துள்ளது.

News July 7, 2025

சென்னை மாநகராட்சி பகுதிகளில் புதிய அரசு சேவை முகாம்கள்

image

சென்னை மாநகராட்சியில் ஜூலை 15 முதல் ஆறு வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் தொடங்குகின்றன. தன்னார்வலர்கள் திங்கள்கிழமை முதல் வீடு வீடாக விண்ணப்பப் படிவங்களை வழங்குவார்கள். இம்முகாம்களில் மருத்துவ சேவைகளும் வழங்கப்படும். விண்ணப்பங்கள் 45 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு, தேவையான சேவைகள் மற்றும் ஆவண விவரங்கள் பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும்.

error: Content is protected !!