News March 2, 2025
சென்னை செல்லும் கடலூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கடலூரில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள் கிளம்பாக்கம் மற்றும் மாதவரம் மட்டுமே இயக்கப்படும், தாம்பரம் செல்லாது என்றும் கிளாம்பாக்கத்தில் இருந்து மாநகரப் பேருந்தில் செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மாநகரப் போக்குவரத்து காவல்துறை வழங்கிய பரிந்துரையின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News April 4, 2026
கடலூர்: 10 ஆண்டுக்கு பிறகு மோதும் வேட்பாளர்கள்

கடலூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் சந்திரசேகர் போட்டியிட உள்ளார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தற்போது அதிமுக வேட்பாளராக போட்டியிடும் எம்.சி.சம்பத்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்நிலையில் தற்போது எம்.சி.சம்பத் – சந்திரசேகர் இருவரும் 10 ஆண்டுகளுக்கு பிறகு நேருக்கு நேர் மோத உள்ளனர்.
News April 4, 2026
கடலூர்: சிறுமி கர்ப்பம் – இளைஞர் மீது வழக்கு

விருத்தாசலம் அடுத்த எடச்சித்தூரை சேர்ந்தவர் முருகவேல்(27). இவர், 17 வயது சிறுமியை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் முருகவேல் மீது விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 4, 2026
கடலூர்: ரூ.88 லட்சம் விடுவிப்பு

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் 15.03.2026 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் அன்று முதல் தற்போது வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.95,33,841-ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் ரூ.88,05,561 விடுவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


