News September 10, 2025
சென்னை: கொலை வழக்கில் திமுக பிரமுகர் பேரனுக்கு ஜாமின்

சென்னை, திருமங்கலத்தில் கல்லூரி மாணவர் நிதின்சாயை கார் ஏற்றி கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகியின் பேரன் சந்துருவுக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. காதல் பிரச்சினையில் ஏற்பட்ட மோதலால் இக்கொலை நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மனுதாரர் கல்லூரி மாணவர் என்பதாலும், ஏற்கனவே 41 நாட்கள் சிறையில் இருந்ததாலும் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Similar News
News September 10, 2025
சென்னையில் திடீர் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னையில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. சென்னையில் இன்று மதியம் இரண்டு மணி வரையிலுமே வெயில் உச்சத்தில் இருந்த நிலையில்,அதன் பிறகு திடீரென மழை வெளுத்து வாங்கியாது. சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை, சேப்பாக்கம், காமராஜர் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சென்னையில் பெய்த திடீர் மழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. உங்க ஏரியால மழையா?.
News September 10, 2025
சென்னை மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

சென்னை மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <
News September 10, 2025
CM ஸ்டாலின் நாளை கிருஷ்ணகிரி பயணம்

முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை (செப்.11) கிருஷ்ணகிரி செல்ல உள்ளார். நாளை காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து, ஓசூர் பேளகொண்டப்பள்ளி சென்றடையும் அவர், ஓசூரில் நடைபெறும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். மேலும், பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் அவர், வரும் 12-ம் தேதி காலை 10 மணியளவில் விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார்.